சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக ஆட்சி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami
By Jiyath May 04, 2024 12:06 PM GMT
Report

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி 

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக ஆட்சி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு | Height Of Law Order Disorder Edappadi Palaniswami

அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை நான் தினந்தோறும் சுட்டிக்காட்டி வருகிறேன். தற்போது, ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது - அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது - அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து!

வலியுறுத்தல் 

தமிழ்நாட்டில் எந்தவொரு குற்றச்செயலையும் சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.

சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்; கும்பகர்ண தூக்கத்தில் திமுக ஆட்சி - ஈபிஎஸ் குற்றச்சாட்டு | Height Of Law Order Disorder Edappadi Palaniswami

திரு. ஜெயக்குமார் தன்சிங் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் சட்டம் ஒழுங்கை காக்க ஆக்கப்பூர்வத்துடன் செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்.