திமுக'ல எல்லாமே கிழடு கட்டைகள்...மீண்டும் சர்ச்சையில் ஹெச். ராஜா
சர்ச்சையாக பேசி பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தற்போது மீண்டும், திமுக குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.
ஹெச் ராஜா செய்தியாளர் சந்திப்பு
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, UPSC பரிட்சையில் 5 மார்க் வாங்குவாரா என கேள்வி எழுப்பிய அவர், அரசியலில் நன்றாக நடந்து கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை செய்தார்.
ஆர்.எஸ்.பாரதி குறித்து கடுமையான விமர்சனம் செய்த ஹெச்.ராஜா, அவரை தற்குறி என குறிப்பிட்டு, மக்களை மீண்டும் ஒரு 2024-இல் ஏமாற்ற செய்யும் வேலை தான் நீட் விவகாரம் என அதிரடியாக கருத்து தெரிவித்தார்.
திமுகவில் அனைவரும் கிழடு கட்டைகள்
செந்தில் பாலாஜியின் இதயத்தில் உள்ள அடைப்பை கண்டுபிடித்து காப்பாற்றிய அமலாக்கத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி சொல்ல வேண்டும் என விமர்சித்த அவர், பாஜகவை சீண்டினால் தங்களை எதிர்கொள்ளும் அளவில் திமுக இல்லை என்றும் திமுகவில் இருப்பவர்கள் கிழடுகள் கட்டைகள் தான் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியான பாஜகவை முதல்வர் சீண்டி பார்க்க வேண்டாம்என எச்சரிக்கை விடுத்த அவர், தங்கள் பாணியில் திருப்பி அடித்தால் உதயநிதியால் தாங்க முடியாது என்றும் ஆர்.எஸ்.பாரதிக்கு நாவடக்கம் தேவை, அவ்வாறு இல்லையென்றால் இல்லை என்றால் நாவை அடக்க என்ன கொண்டு வர வேண்டுமோ அதை தாங்கள் கொண்டு வருவோம் என கூறினார்.