சென்னையில் தொடரும் கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு
சென்னையில் இரவு முதல் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடரும் கனமழை
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, பெரியமேடு, திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், அயனாவரம், கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
தொடரும் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் கடும் அவதி அடைந்தனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின்வெட்டு, மின் கசிவு போன்ற புகார்களுக்கு இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
உதவி எண்கள்;
1913,044-25619206,044-25619207,044-25619208 இந்த எண்களில் புகார் அளிக்கலாம்.
மேலும் நகராட்சியின் நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் வழியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது