அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் நேற்று முதல் தொடங்கி கனமழை பெய்துவரும் நிலையில்,
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, தற்போது சென்னையில் ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Isolated heavy to very heavy rainfall activity over coastal Tamilnadu, Puducherry & Karaikal during next 2 days and decrease thereafter.
— India Meteorological Department (@Indiametdept) December 31, 2021
Strong northeasterly winds are prevailing off the coast off Tamilnadu in the lower levels.