தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் - வானிலை மையம்
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாகஈ தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.