மக்களே உஷார்...5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..!

Tiruchirappalli
By Thahir Jul 31, 2022 09:06 AM GMT
Report

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று தருமபுரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

மக்களே உஷார்...5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! | Heavy Rain Warning For 5 Districts

மேலும் நீலகிரி, தஞ்சை, கோவை, கரூர், அரியலூர், கடலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, கோவை, திருப்பத்தூர் ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 1ந்தேதி, 2, 3 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, கரூர், திருப்பூர், திருப்பத்தூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைப் பெய்ய வாய்யப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.