தமிழகத்தில் உள்ள இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Alert Heavy Rain Orange Tamilnadu
By Thahir Apr 12, 2022 07:31 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள்,அரியலுார்,கடலுார் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும்,நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இவ்வாறு உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை தினம் வரை ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதையடுத்து தென் மாவட்டங்கள்,புதுக்கோட்டை,கடலுார்,அரியலுார்,மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.