அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டி தீர்க்கபோகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்
Chennai
By Thahir
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடலுார், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கரூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.