கன மழை எதிரொலி: சென்னையில் 2 சுரங்க பாதைகள் மூடல்

Chennai
By Thahir Nov 11, 2022 08:41 AM GMT
Report

கனமழை காரணமாக சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளன.

மிரட்டும் கனமழை

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. அதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கன மழை எதிரொலி: சென்னையில் 2 சுரங்க பாதைகள் மூடல் | Heavy Rain Closed Subway

இதில் சென்னை சூரப்பட்டு விநாயகபுரம் சுரங்கப்பாதை மற்றும் , கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை ஆகியவை மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளன.

சூரபட்டு சுரங்கப்பாதையில் செல்வதற்கு பதிலாக 100அடி சாலையில் செல்லவும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதையில் செல்பவர்கள் அதன் மேம்பாலம் வழியாகவும் செல்ல போக்குவரத்து துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.