கொரோனா தடுப்பூசி போட்டதால் விவேக்குக்கு மாரடைப்பா? குஷ்பு உருக்கமான வேண்டுகோள்

heart-block-heart-attack
By Nandhini Apr 16, 2021 09:48 AM GMT
Report

நடிகர் விவேக் தடுப்பூசி போட்டதால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று தயவு செய்து யாரும் இணைத்து பேசாதீங்க என நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போது விவேக்கிற்கு ‘எக்மோ’கருவி பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று நடிகர் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்ட பிறகு அவர், ‘எல்லோரும் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தினார். விவேக் சொன்ன அறிவுறுத்தல் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்து வைரலாயின.

இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் மாரடைப்பு வந்தது என்று மக்களிடையே ஒருவித அச்சம் நிலவி வருகிறது. இது ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தயவுசெய்து விவேக் நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதையும் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையும் இணைத்து பேச வேண்டாம். இதற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

மருத்துவர்கள் தங்கள் கடமையைச் செய்யட்டும். தயவுசெய்து நீங்கள் சென்று தடுப்பூசி போடுங்கள். வதந்திகள் மற்றும் சுய அனுமானங்களால் நிலைமையை திசைதிருப்ப வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.