உடலுறவின் போது மாரடைப்பு..கணவன் உதவியோடு உடலை அப்புறப்படுத்திய பெண்

Karnataka Death
By Thahir Nov 26, 2022 11:33 AM GMT
Report

பெங்களூருவில் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அவரை கணவர் உதவியோடு பெண் அப்புறப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உல்லாசத்தின் போது உயிரிழப்பு 

பெங்களூருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் இவருக்கு வயது 67. தொழில் அதிபரான இவர் தனது வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்து போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Heart attack during sex..Woman disposed of the body

இதனால் பதறிப் போன அந்த பெண் தன் கணவரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் தன் கணவர் மற்றும் சகோதரன் உதவியோடு உடலை அப்புறப்படுத்தி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி வீசியுள்ளனர்.

உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

செல்போனில் அடிக்கடி உல்லாச உரையாடல் 

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் பெண் மற்றும் இரு ஆண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பெண்ணுடன் அந்த நபர் உடலுறவில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து உயிரிழந்த பாலசுப்பிரமணியம் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை ஆய்வு செய்த போது ஒரு பெண்ணுடன் அவர் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

பின்னர் உயிரிழந்த பாலசுப்பிரமணியம் பற்றி அவரது குடும்பதினருடன் விசாரணை நடத்தியதில் அவருக்கு ஏற்கனவே ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரின் உயிரிழப்பு பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.