ஹிஜாப் வழக்கை மீண்டும் ஒத்திவைத்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்
ஹிஜாப் வழக்கை மீண்டும் நாளை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தது கர்நாடகா உயர்நீதிமன்றம்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் காவி துண்டு அணிந்து கோஷங்களை எழுப்பினர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை கர்நாடகா முழுவதும் பரவ தொடங்கிய நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுத்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை மீண்டும் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.