இனிமேல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்க அவசியம் இல்லை - மா.சுப்பிரமணியன்

healthminister m.subramaniyan extra oxygenbeds
By Anupriyamkumaresan May 22, 2021 04:37 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இனி சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இனிமேல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்க அவசியம் இல்லை - மா.சுப்பிரமணியன் | Healthminister M Subramaniyan Extraoxygenbeds

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டவர் 3,7வது தளத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 136 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இனிமேல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்க அவசியம் இல்லை - மா.சுப்பிரமணியன் | Healthminister M Subramaniyan Extraoxygenbeds

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை, 1522 ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் இருந்து வந்த நிலையில் தற்போது சாதாரண படுக்கைகளும் சேர்த்து மொத்தமாக 2050 படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார்.

இனிமேல் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்க அவசியம் இல்லை - மா.சுப்பிரமணியன் | Healthminister M Subramaniyan Extraoxygenbeds

மேலும், இனிமேல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாகனங்களிலே சிகிச்சைக்காக நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் வராது எனவும் தெரிவித்துள்ளார்