ஆணுறையை வைத்து தலையில் கட்டுப்போட்ட கொடுமை - அலட்சியத்தில் மருத்துவமனை!

Viral Video Crime Madhya Pradesh
By Sumathi Aug 21, 2022 05:27 AM GMT
Report

தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறையை வைத்து கட்டுப்போட்டு மருத்துவமனை அலட்சியமாக நடந்துள்ளது.

தலையில் காயம்

மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்டத்தில், போர்சா சமூக சுகாதார மையம் உள்ளது. இங்கு காயமடைந்த வயதான பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த சுகாதார ஊழியர்கள், தலையில் காயமடைந்து ரத்தம் நிற்காததால்

ஆணுறையை வைத்து தலையில் கட்டுப்போட்ட கொடுமை - அலட்சியத்தில் மருத்துவமனை! | Head Wound Dressed With Condom Pack At Mp

ஆணுறையின் கவரை காயம்பட்ட இடத்தில் வைத்து கட்டு போட்டுள்ளனர். அதனையடுத்து, சில நாட்கள் கழித்து கட்டை மாற்ற அப்பெண், மொரேனா மாவட்ட மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

ஆணுறை வைத்து சிகிச்சை

அப்போது பணியில் இருந்த மருத்துவர் ஏற்கனவே தலையில் போடப்பட்ட கட்டை கழற்றியபோது உள்ளே ஆணுறை கவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காயமடைந்த நபரிடம் கேட்டபோது,

காயம் ஏற்பட்ட அன்று போர்சா சமூக சுகாதார மையத்தில் தனக்கு கட்டுபோட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, போர்சா சமூக சுகாதார மையத்தின் ஊழியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.