மறைக்கப்பட்ட பைபிளின் அதிகாரம் : விஞ்ஞான ஆரய்ச்சியில் வெளியான உண்மை
பைபிளின் மறைக்கப்பட்ட அதிகாரங்களை புற ஊதா கதிர் மூலம் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பைபிளின் மறைக்கப்பட்ட பகுதி
சுமார் 1,500 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முதலில் எழுதப்பட்ட பைபிளின் மறைக்கப்பட்ட அத்தியாயத்தை ஆஸ்திரிய விஞ்ஞானி ஒருவர் புற ஊதா கதிர் மூலம் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரிய அகாடமி ஆஃப் சயின்ஸைச் சேர்ந்த கிரிகோரி கெசெல், பைபிளின் மத்தேயு அத்தியாயங்கள் 11 மற்றும் 12-ஐ பைபிள் புத்தகத்தின் மூன்று அடுக்குகளின் கீழ் ஒரு சிரிய மொழியில் இருப்பதை புற ஊதா கதிர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.

மறைக்கப்பட்ட அதிகாரம்
சிரியாக் கிறிஸ்தவத்தின் பாரம்பரியம் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின்(பைபிள்) பல மொழிபெயர்ப்புகளை அறிந்திருக்கிறது என்று கெசெல் ஒரு அறிக்கையில் கூறினார். மேலும் இந்த உரை 6 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படுவதற்கு முன்பு 3 ஆம் நூற்றாண்டில் ஏற்கனவே எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அதே சமயம் மத்தேயு அத்தியாயம் 12 கிரேக்க வசனம் 1: “அந்த நேரத்தில் இயேசு ஓய்வுநாளில் தானிய வயல்களின் வழியாகச் சென்றார்; மேலும் அவருடைய சீடர்கள் பசித்து, தானியத்தின் தலைகளை எடுத்து உண்ணத் தொடங்கினர்,” என்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிரியாக் மொழிபெயர்ப்பு கூறியுள்ளதாக கிரிகோரி கெசெல் தெரிவித்துள்ளார்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan