செந்தில் பாலாஜி பிணை மனு...ED பதிலளிக்க நீதிமன்றம் ஆணை...!!

V. Senthil Balaji Tamil nadu Chennai Enforcement Directorate
By Karthick Sep 11, 2023 06:16 AM GMT
Report

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

செந்தில் பாலாஜி - ED

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் மீது 3000 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

hc-asks-ed-to-answer-in-senthil-balaji-jameen-case

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு எந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்பதில் அதிகப்படியான குழப்பம் நீடித்த நிலையில், முதன்மை நீதிமன்றமே விசாரிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அமலாக்கத்துறை பதிலளிக்க ஆணை

இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட்ட போது, அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஆணை பிறப்பித்துள்ளார்.

பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில், உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.