தீபாவளி பரிசாக காரை பரிசளித்த முதலாளி - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!

Diwali
By Thahir Nov 04, 2023 09:41 PM GMT
Report

தன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த காரை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் அதன் உரிமையாளர்.

ஆச்சரிய பரிசு 

அரியானாவின் பஞ்ச்குலா நகரில் மிட்ஸ்கார்ட் என்ற பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதன் நிறுவனராக எம்.கே.பாடியா இருக்கிறார்.

தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பரிசளிக்க முடிவு செய்தார் பாடியா.

தீபாவளி பரிசாக காரை பரிசளித்த முதலாளி - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்! | Haryana Pharma Company Owner Gifts Tata Punch Car

இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் ஆஃபீஸ் பாய் எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர்.

விலை ரூ.6.50 லட்சமாகும்

நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் காரை பரிசளித்தார்.

இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை  ரூ.6.50 லட்சமாகும்

தீபாவளி பரிசாக காரை பரிசளித்த முதலாளி - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்! | Haryana Pharma Company Owner Gifts Tata Punch Car

இது குறித்து பாடியா கூறுகையில், "என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள்.

கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என கூறினார்.