ஆஸ்துமாவுக்கு 'மீன் பிரசாதம்' வழங்கிய ஹரிநாத் கவுட் மரணம் - சோகத்தில் பொதுமக்கள்!

India Telangana Hyderabad Death
By Jiyath Aug 25, 2023 08:20 AM GMT
Report

ஆஸ்துமாவுக்கு மீன் பிரசாதம் வழங்கி வந்த ஹரிநாத் கவுட் என்பவர் மரணமடைந்துள்ளார். 

மீன் பிரசாதம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 170 ஆண்டுக்கும் மேலாக ஆஸ்துமா நோயை குணப்படுத்துவதற்கான மீன் மருந்து பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை, ஹைதராபாத் பாதினி குடும்பத்தை சேர்ந்த ஹரிநாத் கவுட் என்பவர், அவரது முன்னோர்கள் கற்றுத் தந்த பாரம்பரிய மருந்தை வழங்கி வருகிறார்.

ஆஸ்துமாவுக்கு

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த மருந்து தென்மேற்கு பருவ மழை துவங்கும் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், மிருகசீரிஷ கார்த்திகை நட்சத்திர நாளில் நம்பள்ளி கிராமத்தில் தரப்படுகிறது. விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்ட்டை வைத்து, ஆஸ்துமா நோயாளிகளுக்கு தரப்படும்.

சைவ உணவுக்காரர்களுக்கு, இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்து தரப்படுகிறது. லட்ச கணக்கான பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த மீன் பிரசாதத்தை வாங்க திரண்டு வருகிறார்கள்.

மரணம் 

இந்த பிரசாதத்தை ஒருமுறை சாப்பிட்டாலே, ஆஸ்துமா நோய் சுத்தமாக குணமாகி விடுவதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக மீன் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி மருத்துவம் பார்த்து வந்த

பாதினி குடும்பத்தை சேர்ந்த மூத்தவரான ஹரிநாத் கவுட்,வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தனது 84 வயதில் காலமானார். இந்த செய்தி பொதுமக்களை கவலையிலும், வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது. அவரின் இறுதிச் சடங்கு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.