ஹர்திக் பாண்டியாவை இனி இந்த இடத்தில் வைக்கணும் : அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர்
அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்டிக் பண்டியாவை இந்த இடத்தில் பேட்டிங் செய்ய வைத்தால் வேற லெவலில் இருக்கும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து டி20 உள்ளடக்கிய தொடரின் முதல் போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில், சீனியர் வீரர்கள் பலர் இல்லாத நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை வைத்து கட்டமைக்கப்பட்ட இந்த அணி, எப்படி செயல்படும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் மிகவும் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் , அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்தால் தென்னாப்பிரிக்க அணியை அடித்து துவம்சம் செய்து விடலாம் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது,“ என்னை பொருத்தவரை ஹர்திக் பாண்டியா ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்வார், சற்று நினைத்துப் பாருங்கள் ஹர்டிக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இரு வீரர்களும் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்தால் தென்னாப்பிரிக்க அணியை அடித்து துவம்சம் செய்து விடலாம், கடைசி 6 ஓவர்களில் நிச்சயம் இந்த இரண்டு வீரர்களும் 100 முதல் 120 ரன்கள் அடித்து அசத்துவார்கள், அவர்களுக்கு அந்த ஆற்றல் உள்ளது,
நான் தற்பொழுது எதிர்பார்ப்பதெல்லாம் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் செய்யவேண்டும் என்பதை தான்” என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.