ஷிவம் துபே வீக்னஸ் இதுதான்; சரியா விளையாட தெரியவில்லை - ஹர்திக் பாண்டியா விமர்சனம்!
தோல்விக்கு காரணம் குறித்து, ஷிவம் துபேவின் வீக்னஸ் குறித்தும் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இந்த ஆண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் நேற்று வான்கடேவில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் மும்பை அணி இடையிலான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 206/4 ரன்களை குவித்தது. இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 186/6 ரன்களை சேர்த்து, 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஷிவம் துபே வீக்னஸ்
இதையடுத்து போட்டி முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேசினார், அப்போது, ''நிச்சயம் வெற்றியைப் பெற்றிருக்க முடியும். பதிரனாதான் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டார்.இவரை சிறப்பாக எதிர்கொண்டிருந்தால் வென்றிருப்போம் அடுத்த 4 போட்டிகளில் வெற்றிகளை பெற போராடுவோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஹர்திக் பாண்டியா, ''ஷிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே அதிரடியாக விளையாடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்களை இன்னமும் சரியாக எதிர்கொள்வது கிடையாது'' என்று தேவையில்லாமல் ஷிவம் துபேவின் வீக்னஸ் குறித்து பேசினார்.
ஷிவம் துபே தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக விளையாடி வருவதால் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அவர் விளையாட கூடும் என்று பல கருத்துக்கள் பரவி வருகின்ற நிலையில், துபேவின் வீக்னஸ் குறித்து பாண்டியா பேசியுள்ளதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.