உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்டியா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

Hardik Pandya Sunil Gavaskar Indian Cricket Team
By Nandhini Sep 16, 2022 12:28 PM GMT
Report

உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்டியா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 7-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி வீரர்கள்

ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெற்றிருக்கின்றனர்.

hardik-pandya-sunil-gavaskar-indian-cricket-team

சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

இந்நிலையில், உலக கோப்பை போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் ஆல் ரவுண்டர் ரவி சாஸ்திரி இந்தியாவுக்காக சாதித்தது போல் ஹர்த்திக் பாண்ட்யாவால் சாதிக்க முடியும். ரவி சாஸ்திரி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடுவார். அதேபோல அனைத்திலும் ஹர்த்திக் வல்லவர். ஹர்த்திக் பாண்டியா முதுகு காயத்திலிருந்து மீண்டு வந்து சில மாதங்களாகிறது. அவரை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.