கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இப்படித்தான் இருக்கும்.... - கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிருப்தி...!
கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இப்படித்தான் இருக்கும் என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடந்தது.
இப்போட்டியில் இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 டி20 தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.
நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்நிலையில், நேற்று 2-வது டி20 போட்டி லக்னோவில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.
இதனையடுத்து களத்தில் இறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. இதயைடுத்து, 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களத்தில் இறங்கியது.
இப்போட்டியில், சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார்.
இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்து, நியூசிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன.
ஹர்த்திக் பாண்டியா அதிருப்தி
இந்நிலையில், லக்னோ ஆட்டத்தைக் குறித்து கேப்டன் ஹர்த்திக் பாண்டியா அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த பிட்ச் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விடுவோம் என்று நினைத்தேன். ஆனால், ரொம்ப தாமதமானது. உண்மையை சொல்ல போனால் இந்த ஆடுகளம் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது.
இரு அணி வீரர்களுமே பிட்ச் குறித்து அதிருப்தியை தெரிவித்தனர். 20 ஓவர் போட்டிக்கான ஆடுகளம் இது கிடையாது. கடைசி நேரத்தில் பிட்ச்களை தயார் செய்தால் இப்படித்தான் இருக்கும்.
முன் கூட்டியே ஆடுகளத்தை தயார்படுத்தியிருக்க வேண்டும். 120 ரன் என்பது நல்ல ஸ்கோர். பந்து வீச்சாளர்கள் நல்ல முறையில் செயல்பட்டனர். எங்களை விட அவர்களது பந்து வீச்சுதான் ஸ்பினாது. இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்றார்.