டிஜிபி சைலேந்திரபாபு சம்பளம் குறித்து சர்ச்சை பேச்சு - எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்

Tamil Nadu Police
By Thahir Oct 01, 2022 03:31 AM GMT
Report

டிஜிபி சைலேந்திரபாபு சம்பளம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எச்.ராஜா மீது புகார் 

நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன.

சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

டிஜிபி சைலேந்திரபாபு சம்பளம் குறித்து சர்ச்சை பேச்சு - எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் | H Raja Controversy Speech On Dgp Salary

இது குறித்து கருத்து தெரிவிக்கையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, ‘ டிஜிபி சைலேந்திரபாபு அரசாங்கத்திடம் சம்பளம் வாங்குகிறாரா? அல்லது பி.எப்.ஐ ( பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா) விடம் சம்பளம் வாங்குகிறாரா என தெரியவில்லை.’ என பேசினார்.

எச்.ராஜா பேசியது மிகுந்த சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து காரைக்குடி டிஎஸ்பியிடம் நவ்ஷாத் அலி என்பவர் புகார் அளித்துள்ளார்.