வீடுகளில் தேசிய கொடி கண்டிப்பா ஏற்றியாகணும்; செல்ஃபி முக்கியம் - அரசு உத்தரவு!

Independence Day India
By Jiyath Aug 10, 2023 07:34 AM GMT
Report

அரசு அதிகாரிகள்- ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய கலாச்சாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.  

சுதந்திர தினவிழா

கடந்த ஆண்டு 75வது சுதந்திர தின பவள விழாவையொட்டி தேச பத்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதனால் பல பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசிய கோடியை ஏற்றியிருந்தனர்.

வீடுகளில் தேசிய கொடி கண்டிப்பா ஏற்றியாகணும்; செல்ஃபி முக்கியம் - அரசு உத்தரவு! | Gvt Officials Employees Hoist Flag At Their Homes

அதேபோல இந்த ஆண்டு 75வது சுதந்திர தினவிழா நிறைவு விழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான கொண்டாட்டம் வரும் 13ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய கொடியுடன் செல்பி

இந்த கொண்டாட்டத்திற்காக தபால் நிலையங்களில் ரூ.25க்கு ஒரு கோடி என தேசியகொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரசு அதிகாரிகளும்,ஊழியர்களும் தங்களது வீடுகளில் தேசிய கோடி ஏற்ற வேண்டும் என மத்திய கலாச்சார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வீடுகளில் தேசிய கொடி கண்டிப்பா ஏற்றியாகணும்; செல்ஃபி முக்கியம் - அரசு உத்தரவு! | Gvt Officials Employees Hoist Flag At Their Homes

அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.