பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்... கடைசியில் நடந்த ட்விஸ்ட்... குவியும் பாராட்டு
அசாமில் இளம்பெண் ஒருவர் தன்னிடம் தவறான முறையில் நடக்க முயன்ற இளைஞருக்கு தக்க பாடம் கற்பித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்த பாவனா காஷ்யப் என்ற அந்த இளம்பெண் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் அட்ரஸ் கேட்பது போல அப்பெண்ணின் உடலை தொட்டு அநாகரீகமாக நடந்துள்ளார்.
இதனைக் கண்டு பதறிய பாவனா என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க அந்த இளைஞரோ வந்த வேலை முடிந்ததுபோல் அங்கிருந்து கிளம்ப தயாரானார். இங்கு தான் சிறப்பான அந்த சம்பவம் நடைபெற்றது. தனது முழு பலத்தையும் திரட்டி பைக்கின் டயரை தூக்கினார். அப்படியே அருகில் இருந்த கழிவுநீர் கால்வாயில் அந்த இளைஞரை பைக்கோடு கவிழ்த்தார்.
அதனால் அவரால் உடனடியாக அங்கிருந்து அவரால் தப்பவும் முடியவில்லை.அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பாவனாவுக்கு உதவியதோடு இதனை வீடியோவாகவும் பதிவு செய்தனர். அந்த வீடியோவை பாவனா, தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நெருக்கடி, ஆபத்து சூழலிலும் இளம்பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்த மதுசனா ராஜ்குமார் என்ற இளைஞர் எவ்வளவோ கெஞ்சியும் பாவனா அவரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகி்ன்றனர்.