ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது குஜராத் அணி..!
ராஜஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டி செய்தது 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி 18.1 ஓவர்களில் 131 ரன்களை எட்டியது.
7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.