நடுங்க வைத்த சம்பவம் - முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல் - மல்யுத்த வீரர் கைது

Gujarat Sexual harassment
By Nandhini Dec 05, 2022 10:51 AM GMT
Report

குஜராத்தில் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்த மல்யுத்த வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இளம் யோகா ஆசிரியை ஒருவர் மாளவியா நகர் காவல் நிலயைத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், முகமூடி அணிந்த யாரோ ஒருவர் தன்னை உடல் ரீதியாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த நபரை கண்டுபிடிக்க, 4 கண்காணிப்பு படைகளை அமைத்தனர்.

gujarat-sexual-harassment-wrestler-arrested

மல்யுத்த வீரர் கைது

போலீசார் முதற்கட்ட நடவடிக்கையில், தெருவில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி கேமராவில் அத்தெருவில் வணிக வளாகங்கள், கடைகள், குடியிருப்பு வீடுகள் மற்றும் பிற பொது இடங்ளளை ஆய்வு செய்தனர். இப்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் முகமூடி அணிந்து நடந்து சென்றார். அந்த நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பிரபல மல்யுத்த வீரர் கவுஷல் பிபாலியா (24) என்பது தெரியவந்துள்ளது. கவுஷல் மாநில அளவில் 2016, 2017, 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 74 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதனையடுத்து, கவுஷலை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அவர் முகமூடி அணிந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

100 பெண்களை பாலியல் சீண்டல் செய்தது கவுஷல் ஒப்புக்கொண்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.