கழிவறைக்கு சென்ற கர்ப்பிணிக்கு பிரசவலி... - டாய்லெட்டில் குழந்தை சிக்கியதால் பரபரப்பு

Gujarat Pregnancy
By Nandhini Apr 21, 2022 06:56 AM GMT
Report

குஜராத், அகமதாபாத்தில் பெண்கள் பாதுகாப்பு மேம்பாட்டு இல்லத்தில் வசித்து வந்த பெண்களில் ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அப்பெண் சற்று மனநிலை சரியில்லாதவர்.

இந்நிலையில், அப்பெண் மலம் கழிக்க அங்குள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணிற்கு வெஸ்டர்ன் டாய்லெட்டில் குழந்தை பிறந்திருக்கிறது.

ஆனால், பிறந்த குழந்தை டாய்லெட்டிற்குள் சிக்கிக்கொண்டது. இதனால் செய்வதறியாது அப்பெண் அலறி துடித்துள்ளாள். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பெண்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து பாதுகாப்பு இல்லத்தை சேர்ந்தவர்கள், போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் முயற்சியால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக அப்பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டுப் போய் சேர்த்தனர். தற்போது, மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மனநிலை சரியில்லாத பெண் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கழிவறைக்கு சென்ற கர்ப்பிணிக்கு பிரசவலி... -  டாய்லெட்டில் குழந்தை சிக்கியதால் பரபரப்பு | Gujarat Pregnancy