குஜராத்தில் பரபரப்பு - 9 இஸ்லாமியர்களை நடுவீதியில் கைகளை கட்டி பிரம்பால் அடித்த போலீசார் - வைரல் வீடியோ
குஜராத்தில் 9 இஸ்லாமிய ஆண்களை பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் கைகளை கட்டி போலீசார் பிரம்பால் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
9 இஸ்லாமியர்களை பிரம்பால் அடித்த போலீசார்
குஜராத் மாநிலம், விஜயதசமியை முன்னிட்டு கர்பா என்னும் நடன நிகழ்ச்சியில் 9 இஸ்லாமியர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, 9 இஸ்லாமியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் பின்பு, கற்களை வீசியதற்காக கைது செய்யப்பட்ட 9 முஸ்லீம் ஆண்களை பொதுமக்கள் மத்தியில் நடுவீதியில் மரத்தில் கைகளை கட்டி, 'பாரத் மாதா கி ஜே' என்ற முழக்கங்களுக்கு இடையே காவல்துறையினர் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

New India is Medieval India: Nine Muslim men are being publicly flogged while crowd is doing nationalist chant in Modi’s state Gujarat! pic.twitter.com/nMcBQKy0IO
— Ashok Swain (@ashoswai) October 4, 2022