கள்ளத்தொடர்பால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!அரை நிர்வாணமாக கணவரை தோளில் சுமந்து ஊர்வலமாக நடக்க சொல்லி தண்டனை..
குஜராத்தில் வேறு ஒரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் திருமணமான இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் உள்ளது கஜூரி எனும் பழங்குடியினர் வசித்து வரும் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் திருமணமான நிலையில் வேறுஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் கடந்த மாதம் அந்த நபருடன் இளம்பெண் ஓடிபோயுள்ளாராம். இதனை தொடர்ந்து அந்த பெண்ணை கண்டுபிடித்த அவரது கணவரும், குடும்பத்தினரும், அவரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டி சென்றுள்ளனர்.
மேலும் சிறுது தூரம் சென்ற பிறகு கணவரை தோளில் தூக்க வைத்து ஊர்வலமாக நடக்க சொல்லி கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#Gujarat | FIR lodged against a 23-year-old tribal woman's husband and other villagers in #Dahod district, for allegedly parading her naked as punishment for eloping with another man#Gujaratinews pic.twitter.com/K3ZM13E4oy
— First India (@thefirstindia) July 14, 2021