சந்திரயான் 3: லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்; நாசாவில் பணிபுரிந்தேன் - பகீர் கிளப்பும் நபர்!

India ISRO
By Jiyath Aug 26, 2023 06:47 PM GMT
Report

சந்திரயான் 3 லேண்டரை நான்தான் வடிவமைத்ததேன் என்று நபர் ஒருவர் கூறி வருகிறார்.

சந்திரயான் 3

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

சந்திரயான் 3: லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்; நாசாவில் பணிபுரிந்தேன் - பகீர் கிளப்பும் நபர்! | Gujarat Man Claims He Designed Vikram Lander

இதைத் தொடர்ந்து சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக கடந்த 23ம் தேதி 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த ஒரு நாடும் ஆய்வு செய்தது இல்லை என்ற நிலையில், இந்த சரித்திர சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவில் ஆய்வை தொடங்கியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறும் அழகிய காட்சிகளையும் இஸ்ரோ பதிவிட்டு வருகின்றனர்.

சந்திரயான் 3 லேண்டரை நான்தான் வடிவமைத்ததேன் என்று நபர் ஒருவர் கூறி வருகிறார்.

லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்

இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் தான்தான் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை வடிவமைத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் சேனல்களின் அவர் பேட்டியளித்த வருகிறார்.

சந்திரயான் 3: லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்; நாசாவில் பணிபுரிந்தேன் - பகீர் கிளப்பும் நபர்! | Gujarat Man Claims He Designed Vikram Lander

அவர் கூறுகையில் 'சந்திரயான் 3 லேண்டரை வடிவமைத்தேன் என்றும் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரயான் 2 திட்டத்தில் பணியாற்றியதால், சந்திரயான் 3 திட்டத்திலும் பணியாற்றுமாறு தன்னை இஸ்ரோ அழைத்ததாக கூறுகிறார். ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட லேண்டரில் பல மாற்றங்களை செய்தேன், அதனால்தான் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் 'இஸ்ரோவில் மட்டுமின்றி, அமெரிக்காவின் 'நாசா'வில் பணிபுரிந்ததாகவும் சொல்கிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் அவரால் காட்ட முடியவில்லை. எங்களின் ஆரம்பகட்ட விசாரணையில், அந்த நபர் வெறும் பி.காம் பட்டம் மட்டும் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

அவர் 'இஸ்ரோ'வில் பணிபுரிந்ததாகவும், லேண்டரை வடிவமைத்ததாகவும் கூறுவது பொய் என்பது உறுதியானால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்