எனது வாழ்க்கையில் இதுபோன்ற வேதனையை அனுபவித்ததில்லை : பால விபத்து குறித்து பிரதமர் சோகம்
தனது வாழ்க்கையில் இதுபோன்ற விபத்தை கண்டதே இல்லை என்று குஜராத்தின் தொங்குபால விபத்து குறித்து பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
குஜராத் விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொங்கும் பாலம் அறுந்து விழுந்த சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது
இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமான எடை காரணமாகவும் அனுமதியின்றி அதிகமான மக்கள் கூறியதன் காரணமாக பாலம் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பட்டேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் மோடி
இந்த நிலையில் குஜராத்தில் இன்று நடைபெறவிருந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் குஜராத்தில் நடந்த ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார் .
சர்தாருக்கு புகழாரம்
அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இன்று நமது எதிரிகள் சாதி மொழி மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டை உடைக்க முயல்வதாகவும் இவற்றையெல்லாம் அப்போதே உடை தெரிந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்று புகழாரம் சூட்டினார்
மேலும் சுதந்திரத்தின் போது இந்தியாவில் சர்தார் பட்டேல் தலைமை இல்லாமல் போயிருந்தால் 550 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் ஒன்று படாமல் இல்லாமல் போயிருக்கும் என்றும் கூறினார்
இதுபோன்ற விபத்தை கண்டதே இல்லை
I am in Ekta Nagar but my mind is with the victims of Morbi. Rarely in my life, would I have experienced such pain. On one hand, there is a pain-riddled heart and on the other hand, there is the path to duty: PM Narendra Modi in Kevadiya, Gujarat #MorbiTragedy pic.twitter.com/TcKkLIUwrK
— ANI (@ANI) October 31, 2022
அதேசமயம் குஜராத்தின் மோர்பி நகரில் தொங்குபால விபத்து குறித்து பேசிய பிரதமர் மோடி நான் தற்போது ஏக்கரில் உள்ளேன் ஆனால் என் மனது மோர்பி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையினை நினைத்து வருந்துகின்றது.
என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற வேதனை அனுபவித்ததில்லை ஒருபுறம் மனதில் வலி உள்ளது மறுபுறம் கடமை இருக்கிறது என்று பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
மேலும் தனது வாழ்க்கையில் இதுபோன்ற விபத்தை கண்டதே இல்லை என்று பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்