குரூப் - 1 தேர்வு ஒத்திவைப்பு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு
Tamil nadu
By Thahir
அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற விருந்த குரூப் 1 தேர்வு தேதி ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
குரூப் - 1 தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர்,

3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.