குரூப் - 1 தேர்வு ஒத்திவைப்பு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

Tamil nadu
By Thahir Sep 09, 2022 01:18 PM GMT
Report

அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற விருந்த குரூப் 1 தேர்வு தேதி ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குரூப் - 1 தேர்வு ஒத்திவைப்பு 

தமிழகத்தில் துணை ஆட்சியர்,  காவல்துறை துணை கண்காணிப்பாளர்,  கூட்டுறவு சங்கதுணைப்பதிவாளர்,  வணிக வரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர், 

குரூப் - 1 தேர்வு ஒத்திவைப்பு டிஎன்பிஎஸ்சி  நிர்வாகம் அறிவிப்பு | Group 1 Postponement Of Examination

3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.