மணமகளின் தாயாருடன் ஓட்டம் பிடித்த மணமகனின் தந்தை - பரபரப்பு சம்பவம்!
மணமகளின் தாயாருடன், மணமகனின் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம்
உத்தர பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கிராமத்தில் மணமகனின் தந்தையும், மணமகளின் தந்தையும் 28 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர். இந்த நீண்ட கால நட்பை உறவாக மாற்ற இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
இதற்காக தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு பிறகு மணமகனின் தந்தையும், மணப்பெண்ணின் தாயும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த சந்திப்பால் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
விசாரணை
இந்நிலையில் அவர்களது பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு மணப்பெண்ணின் தாயாருடன் மணமகனின் தந்தை ஓடிப் போயுள்ளார்.
இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனால், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருந்த மணமகன் மற்றும் மணமகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.