அகதிகள் முகாமில் ஈழத் தமிழர்கள் விடுதலை: வ.கௌதமன் நன்றி

Mk stalin Srilankan refugees V gowthaman
By Petchi Avudaiappan Jul 15, 2021 05:10 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் முதல்கட்டமாக 10 ஈழத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் விருப்பத்தின் பேரில் இலங்கை நாட்டிற்கு செல்ல உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் கௌதமன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், அகதிகள் மறுவாழ்வு துறை அமைச்சர் மாஸ் தான் அவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதேபோல் அகதிகள் முகாமில் உள்ள மற்றவர்களையும் விடுதலை செய்து அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்க வேண்டும் என வ.கௌதமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன் வீடியோ காண: