அரசு அலுவலகத்திற்குள் ஹெல்மெட் போட்டு வேலை பார்க்கும் ஊழியர்கள் - காரணம் இதுதான்!

Government Of India India Telangana
By Vinothini Aug 12, 2023 06:48 AM GMT
Report

ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட் அணிந்த ஊழியர்கள்

தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை செய்து வருகின்றனர்.

govt-employees-wearing-helmets-while-working

இது பற்றி அவர்கள் கூறியது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது, நல்லவேளை யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதனால் தற்பொழுது அங்கு ஊழியர்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்பட கூடாது என்று ஹெல்மெட் அணிந்துகொண்டு வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளனர்.

ஆபத்தான கட்டிடம்

இந்நிலையில், இந்த கட்டிடம் வாடகையில் இயங்கி வருகிறது, சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, ஆனால் உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை பார்த்து வருகின்றனர், இந்த வீடியோ நிதற்பொளுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அங்கு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தங்கள் கோரிக்கைக்காக நேரில் வருவதற்கும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளார்கள்.