அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்: கமல்ஹாசன் வேண்டுகோள்!
கடந்த சில தினங்களாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை விடுத்து வருகிறார் .
இந்த நிலையில் இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனைகளில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக கூறியுள்ள கமல்ஹாசன்.
இறப்பு சான்றிதழ் கிடைத்தால்தான் காப்பீடுகள் உள்ளிட்ட நிவாரணங்களை பெற முடியும்.
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 31, 2021
ஆகவே,அரசுஇதனைஉடனடியாககவனிக்கவேண்டுமென்றும்.இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கூறியுள்ளார்.