போதை ஏறி போச்சு...வட்டாச்சியர் அலுவலகம் சொந்தமாகி போச்சு - குடி போதையில் குறட்டை விட்டு துாங்கிய அதிகாரி..!
மணப்பாறை வட்டாசியர் அலுவலகத்தில் உதவி அலுவலர் ஒருவர் மிதமிஞ்சிய போதையில் குறட்டை விட்டு துாங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டாசியர் அலுவலகத்தின் கீழ் மணப்பாறை,பண்ணப்பட்டி,வையம்பட்டி,வி.பெரியப்பட்டி உள்ளிட்ட குறு வட்டங்களும் 51 வருவாய் கிராமங்களும் உள்ளன.
இந்த வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பட்டா,நில அளவீடு உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த பணிகளுக்காக ஏராளமானோர் தினசரி வட்டாசியர் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பதிவரை அலுவலகத்தில் பதிவரை உதவியாளராக பணிபுரியும் அன்புச்செல்வன் என்பவர் சம்பவத்தன்று பணி நேரத்தில் மது போதையின் உச்சகட்ட மயக்கத்தில் நார்காழியில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு சென்ற பொதுமக்கள் அவர் பணி செய்யும் அழகை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சியினை பொதுமக்கள் வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மது மயக்கத்தில் இருந்த அன்புச்செல்வன் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட பணியார் அவரை மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவரை சோதித்த மருத்துவர்கள் அளவுக்கு மிஞ்சிய மது அருந்தி உள்ளதாக தெரிவித்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த வட்டாசியர் கீதா ராணி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்ததாகவும்,அதன் படி அவர் சஸபெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.