அரசு பள்ளி மாணவியை கதற கதற 10 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை : விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்

sexual-abuse Traumatic-event பாலியல்-வன்கொடுமை அதிர்ச்சி-சம்பவம் government-school-student 10people அரசு-பள்ளி-மாணவி 10-பேர்
By Nandhini Mar 31, 2022 06:50 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, மேல்கூடலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார்.

அந்த மாணவி சில தினங்களாக படிப்பில் ஈடுபாடு இல்லாமல் ரொம்ப சோர்வாக காணப்பட்டார். இதை அறிந்த ஆசிரியர் அந்த மாணவியை அழைத்து தனிமையாக பேசினார்.

அப்போது அந்த மாணவி தனது மாமா சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்முறை செய்து வருவதாகவும், மாமாவின் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து தன்னை கூட்டு பாலியலுக்கு உட்படுத்தியதாகவும் அழுதுக்கொண்டே கூறினாள்.

இதைக் கேட்டு ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக ஆசிரியர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தார். உடலால் பாதிக்கப்பட்ட மாணவியை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரை பதிவு செய்த போலீசார் சசிகுமார், மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.