கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தஞ்சம்? - வெளியான முக்கிய தகவல்
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தஞ்சம் அடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஆட்சி சற்று மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகரித்து வந்த விலைவாசி உயர்வை சற்று குறைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடுகள் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிபர் மாளிகை சூறையாடல்
கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டாபய ராஜபக்சவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர்.
இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை ஆவேசமாக உள்ளே புகுந்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோட்டாபய ராஜபக்ச கப்பல் மூலம் தப்பி சென்றார்.
மாலத்தீவுக்குச் சென்ற கோத்தபய ராஜபக்சே
கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ம் தேதி ராணுவ விமானம் மூலம் தப்பி சென்றார். அதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றடைந்தார்.
தாய்லாந்தில் தஞ்சம்?
கோட்டாபய ராஜபக்சவின் விசா காலம் நாளையோடு நிறைவடைகிறது. இதனையடுத்து, அவர் சிங்கப்பூரை விட்டு புறப்பட வேண்டியிருக்கும்.
அவர் சிங்கப்பூரிலேயே சிறிது காலம் தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை அரசு அனுமதி கோரி இருக்கிறது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து நாளை தாய்லாந்தில் தஞ்சம் அடைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்காலிகமாக தாய்லாந்தில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.