சிங்களர்கள் ஒன்று சேர வேண்டும்...அழைப்பு விடுத்த கோட்டபய...அடுத்து என்ன நடக்கும்?

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Petchi Avudaiappan May 11, 2022 04:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

அனைத்து சிங்களர்களும் ஒன்று சேர வேண்டும் என இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

 இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் சாலையில் இறங்கி தீவிரமாக போராடி வருகிறது. இதனால் அங்கு கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமைச்சரவை கலைக்கப்பட்டது.

ஏற்கனவே அங்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. ஆனால் பாராளுமன்றம் கலைக்கப்படாததால் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் செய்தனர்.

இதன் விளைவு பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அதேசமயம் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது.

இந்தநிலையில் பிரதமர் மாளிகையான அலரியிலிருந்து ராஜபக்ச இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். தற்போது ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என நேற்றைய தினம் கோட்டபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்வதற்கு, அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இன மற்றும் மத நல்லிணக்கத்தை நோக்கி உங்களைத் தள்ளும் நாசகார முயற்சிகளை நிராகரிக்குமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன் . நிதானம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வை ஊக்குவித்தல் இன்றியமையாதது என தெரிவித்துள்ளார். 

இவரின் வேண்டுகோளை போராட்டக்காரர்கள் ஏற்பார்களா? இல்லையா? என்பது இனி வரும் காலத்தில் தெரியும்...