காரை வெள்ளத்தில் சிக்க வைத்த கூகுள் மேப் - பத்திரமாக மீட்பு

By Thahir Aug 30, 2022 09:18 AM GMT
Report

கூகுள் மேப் பார்த்தபடி காரை இயக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர்.

வெள்ளத்தில் சிக்கிய கார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஓசூர் பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கூகுள் மேப் பார்த்தபடி காரை இயக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெள்ளத்தில் சிக்கினர். சர்ஜாபூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்றிரவு கிளம்பியுள்ளனர்.

காரை வெள்ளத்தில் சிக்க வைத்த கூகுள் மேப் - பத்திரமாக மீட்பு | Google Maps Flooded The Car

அப்போது கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டி சென்றார் பின்னர் பேக்கப்பள்ளி பகுதியை கடந்துள்ளார். அப்போது மழையால் தரைப்பாலம் நீரில் மூழ்கியிருந்தது இதை கவனிக்காமல் அவர் காரை தரைப்பாலத்திற்குள் இறக்கிவிட்டார்.

இதனால் கார் வெள்ள நீரில் சிக்கியது. இதனால் காரை விட்டு வெளியேற முடியாததால் உடனடியாக தமிழக போலீசாரின் அவசர எண்ணை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துள்ளனர்.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி உதவியுடன் 4 பேரையும் பத்திரமாக மீட்டனர்.