நல்லாட்சி நடப்பதால் தான் தமிழகத்தில் முதலீடுகள் அதிகரிப்பு ...முக ஸ்டாலின் பெருமிதம்

M K Stalin Tamil nadu India
By Karthick Aug 28, 2023 07:59 AM GMT
Report

நான் முதல்வன் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு UPS தொழில்நுட்ப மையத்தில் பயிற்சிக்கான கடிதத்தை முக ஸ்டாலின் மாணவர்களுக்கு அளித்தார்.

நல்லாட்சி நடைபெறுகிறது

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமான UPS-ன் தொழில்நுட்ப மையம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. சரக்கு, போக்குவரத்து, விநியோக சங்கிலி மேலாண்மை நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் சார்பில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.

good-government-in-tamilnadu-mk-stalin

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதால் தான் முதலீடுகள் அதிகரிப்பி என பெருமிதம் தெரிவித்தார். பல பன்னாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன என தெரிவித்த முக ஸ்டாலின், தமிழக இளைஞர்கள், மாணவர்களின் திறனை மேம்படுத்த வெளிநாட்டு நிறுவங்களுடன் இணைத்து பயிற்சி அளிக்கப்பட்டு என கூறினார்.

பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்க, அதிகரிக்க அனைத்து முயற்சிகளும் அரசு மேற்கொண்டுள்ளது என கூறி, இந்தியாவின் இரண்டு பெரிய பொருளாதாரமாக தமிழகம் இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரம் 1 ட்ரில்லியனாக உயர்த்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.