உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் சரீன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
உலக குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற நிகாத் சரீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக குத்துச் சண்டை தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார்.
52 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சரீன் சாதனை படைத்துள்ளார்.இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடி தங்கம் வென்றுள்ள நிகாத் சரீனுக்கு பாராட்டுகள்.
Congratulations @nikhat_zareen on your stunning and well-deserved Gold medal at Women's World Boxing Championship.
— M.K.Stalin (@mkstalin) May 20, 2022
Your success story from Nizamabad to Istanbul will be a great inspiration for many young girls to follow their dreams with hope and determination. pic.twitter.com/U91rCjsTyz
இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர்.நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும்" என்று தெரிவித்துள்ளார்.