சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது - பொதுமக்கள் அதிர்ச்சி

goldrate goldratecross40k goldratechennai
By Swetha Subash Mar 07, 2022 08:30 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000-ஐ கடந்தது.

தற்போது உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக தங்கம் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதலே படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடந்த 22-ம் தேதி ரூ. 38,000-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலை கடந்த 24-ம் தேதி 39000-ஐ தாண்டியது.

இதன் பிறகு தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக படிபடியாக உயர்ந்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 40 ஆயிரத்தை தாண்டியதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்து, ரூ.40,440-க்கும், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5055-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 1.80 காசுகள் அதிகரித்து ரூ. 75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.