ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை - கலக்கத்தில் இல்லத்தரசிகள்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 43 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை ஏற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,365க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.74க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 74 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.