மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது - கவலையில் இல்லத்தரசிகள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தைகள் சரிந்து வருவதால் பெரும்பாளான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
தங்கம் விலை உயர்ந்தது
இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து, சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 கிராம் தங்கம் இன்று 10 ரூபாய் உயர்ந்து ரூ.4,785-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதே போல் வெள்ளி விலை சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 1 காசுகள் உயர்ந்து ரூ.68.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி 68,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.