புத்தாண்டை முன்னிட்டு உச்சத்தில் தங்கம் விலை - சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதிலும், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விலை உச்சம் கண்டுள்ளது.
உயர்வு
அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,760-க்கு விற்கப்படுகிறது. கிராமுக்கு ரூ.44 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,720-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.1.20 காசுகள் உயர்ந்து 83 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.83,000-க்கும் விற்கப்படுகிறது.