வார முதலிலேயே ஷாக் கொடுத்த தங்கம் - தொடர் உச்சத்தில் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 14) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.9,155க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.73,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, ரூ.127க்கு விற்கப்படுகிறது.