சவரனுக்கு ரூ.3,700 உயர்வு - ஒரே மாதத்தில் கிடுகிடு ஏற்றம்!
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்டம்பர் 2) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,725க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹137-க்கும், கிலோ வெள்ளி ₹1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.